விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து (தவெக) மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கல்பனா மற்றும் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் இளவரசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக-வில் இணைந்துள்ளனர். வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக-வின் முக்கிய பெண் நிர்வாகிகள் ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
தங்கள் விலகலுக்கான காரணம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா, தவெக-வில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். இது குறித்துக் கேள்வி எழுப்பினால், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தங்களை மிரட்டுவதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்புத் தரும் இயக்கமாகத் திகழும் திமுக-வில் தாங்கள் விரும்பி இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
