“புஸ்ஸி ஆனந்த் என்னை மிரட்டுகிறார்” தவெக நிர்வாகி பரபரப்பு குற்றசாட்டு..!!

By Soundarya on பங்குனி 23, 2026

Spread the love

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து (தவெக) மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கல்பனா மற்றும் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் இளவரசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக-வில் இணைந்துள்ளனர். வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக-வின் முக்கிய பெண் நிர்வாகிகள் ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

தங்கள் விலகலுக்கான காரணம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா, தவெக-வில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். இது குறித்துக் கேள்வி எழுப்பினால், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தங்களை மிரட்டுவதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்புத் தரும் இயக்கமாகத் திகழும் திமுக-வில் தாங்கள் விரும்பி இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்