திமுக கூட்டணியில் நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி முடிவுக்கு வந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) வரவிருக்கும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அதிரடி முடிவை எடுத்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வேல்முருகன் முன்வைத்த கூடுதல் இடங்களுக்கான கோரிக்கை மற்றும் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக திமுக தலைமையுடன் உடன்பாடு எட்டப்படாததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, தமிழகம் முழுவதும் சுமார் 100 தொகுதிகளில் தவாக வேட்பாளர்களைக் களமிறக்க அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்தத் தேர்தலில் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
