மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல், எதிர்பாராத விதமாக தமிழ்நாட்டு விவசாயிகளைப் பாதிக்கும் ‘பட்டாம்பூச்சி விளைவை’ ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈராக் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் தமிழ்நாட்டின் மஞ்சள் மற்றும் வாழைப்பழங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
மேலும் செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல் அச்சத்தால், சரக்குக் கப்பல்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கப்பல் வாடகை மற்றும் காப்பீட்டுத் தொகையும் 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளதால், தமிழக விவசாய விளைபொருட்களின் ஏற்றுமதிச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த ஏற்றுமதித் தடையால் சர்வதேச சந்தையில் தமிழகப் பொருட்களின் போட்டித்தன்மை குறைந்து, உள்ளூர் சந்தைகளில் விளைபொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விளைபொருட்களின் வரத்து அதிகரிப்பதால் ஈரோடு மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களது பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.
இது குறிப்பாக, ஏற்றுமதி நின்று போனதால் மஞ்சளின் விலை குறையத் தொடங்கியுள்ளது. இவ்வாறு எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போர், உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது நவீன உலகமயமாக்கலின் கசப்பான உண்மையாக மாறியுள்ளது.
