மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, குழாய் வழி எரிவாயு இணைப்பு (PNG) பெற்றுள்ள குடும்பங்கள், இனி வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி குடும்பங்கள் PNG வசதியைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த இரு இணைப்புகளையும் ஒரே நேரத்தில் வைத்திருப்பவர்கள் தங்களது சிலிண்டர் இணைப்பை உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்தவும், தேவையற்ற கையிருப்பைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையின் மூலம், PNG பயனாளர்களுக்குத் தடையின்றி எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய அரசு பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
