ஹோட்டல் கழிவறையில் இளைஞர்கள் சிலர் திரவ ஹேண்ட்வாஷை (Handwash) வீணடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விவாதத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிவறைக்குச் சென்ற இளைஞர்கள், அங்கிருந்த ஹேண்ட்வாஷ் டிஸ்பென்சர்களில் இருந்து அதிகப்படியான சோப்புத் திரவத்தை எடுத்து, கைகளை கழுவாமல் நேரடியாக வடிகாலில் ஊற்றி வீணடிக்கின்றனர். இந்தச் செயலை அவர்கள் சிரித்துக்கொண்டே வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
In the hotel washroom, these boys are taking handwash in their hands and pouring it into gutter.
Why do Indians think such acts are cool ? pic.twitter.com/hoa9GylVfI
— Oppressor (@TyrantOppressor) March 11, 2026
“இந்தியர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?” என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, இணையவாசிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் சொத்துக்களையும், வசதிகளையும் பொறுப்பற்ற முறையில் கையாள்வது வருத்தமளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்தகைய செயல்கள் பொது இடங்களிலுள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகள் மீதான மரியாதையின்மையைக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது அல்லது அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், பொழுதுபோக்கிற்காக இது போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது எனப் பொதுமக்கள் கூறி வருகின்றனர். “இது போன்ற செயல்களைச் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும், “பொது இடங்களை முறையாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வு இளையோர் மத்தியில் தேவை” என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன
