“என் பணத்தை கொடுங்க இல்லனா செத்துடுவேன்” லஞ்சம் வாங்கிய போலீஸ்… தற்கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி..வெளியான பகீர் பின்னணி..!!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

அம்ரோஹா மாவட்டம் மங்கடா கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவர், காவல்துறையினரின் அலட்சியம் மற்றும் ஊழல் காரணமாகத் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது மனைவியிடம் மர்ம நபர்கள் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து அசோக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மாறாக, அசோக்கிற்கு எதிராகத் எதிர் தரப்பினர் அளித்த பொய்ப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அசோக் மீதே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாகக் கூறி, அங்கிருந்த உதவி ஆய்வாளர் (தரோகா) அசோக்கிடம் 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்துள்ளது. ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும் அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

   

நீதி கிடைக்க வேண்டிய இடத்தில் பணத்தையும் இழந்து, பொய் வழக்கிலும் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளான அசோக், “எனது பணத்தைத் திருப்பித் தராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என தரோகாவிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு சாமானிய மனிதன் காவல்துறையினரின் முறைகேடுகளால் தற்கொலை விளிம்பிற்குச் தள்ளப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.