வீடு வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்..! கடன் வட்டி தள்ளுபடி…. முதலமைச்சர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் மலிவு விலையில் வீடுகளை வாங்கியவர்கள், தவணைக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதால் ஏற்பட்ட அபராத வட்டியைத் தள்ளுபடி செய்வதாகத் தமிழக அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக இருந்த இந்தக் கூடுதல் கடன் சுமையைக் குறைக்கும் வகையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத வட்டித் தள்ளுபடியானது, 2015 மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்னதாகத் தவணைக் காலம் முடிவடைந்த வீட்டு வசதி வாரியத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். தகுதியுள்ள பயனாளிகள் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.