லைக்ஸுக்காகக் குழந்தையைப் பணயம் வைக்கிறீர்களா?… கையிலுள்ள குழந்தை பொம்மையல்ல… வைரலாகும் வீடியோ…!!!

By Rajeshwari on பங்குனி 5, 2026

Spread the love

இன்றைய நவீன உலகில், சமூக ஊடகங்களில் ஒரு சில நொடிகள் தோன்றி மறையும் ‘ரீல்ஸ்’ வீடியோக்களுக்காகத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கலை மற்றும் திறமையை வெளிப்படுத்துவது தவறல்ல, ஆனால் பாசத்திற்கு இலக்கணமான தாய்மையே கவனக்குறைவாகச் செயல்படுவது அறிவீனம்.

மேலும் நடனமாடும் போது எதிர்பாராமல் உடல் சமநிலை தறமாறினால், கையில் இருக்கும் பச்சிளம் குழந்தை தரையில் விழுந்து ஒரு நொடியில் உயிர் பிரியும் அபாயம் இருப்பதை இவர்கள் உணருவதில்லை. புகழ் மற்றும் லைக்குகளுக்காக ஒரு பிஞ்சு உயிரைக் கருவியாகப் பயன்படுத்துவது, அறிவார்ந்த மனித சமூகம் பின்னோக்கிச் செல்வதையே காட்டுகிறது.

   

“>

   

இதனால் குழந்தையின் பாதுகாப்பு என்பது ஒரு தாயின் முதன்மையான கடமையாகும். அந்தப் பொறுப்பை மறந்து, ஆபத்தான இடங்களிலும், மேடுகளிலும் நின்றுகொண்டு கேமரா வெளிச்சத்திற்காகக் குழந்தையைத் தூக்கி வீசுவதும், அங்கும் இங்கும் அலைக்கழிப்பதும் ஒருபோதும் ஏற்க முடியாதவை.

 

இந்நிலையில் ஒரு தாயின் சிறு கவனக்குறைவு வாழ்நாள் முழுதும் ஆறாத வடுவாக மாறிவிடும் என்பதைப் புரிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிஜ வாழ்வின் மகிழ்ச்சியை விட, திரையில் தெரியும் மாயை பெரிதல்ல என்பதை உணர்ந்து, பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்படுவதே வரும் தலைமுறைக்கு நாம் தரும் ஆகச்சிறந்த பாதுகாப்பாகும்.