“மகளிர் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை”… 20 நாட்களில் ரூ.9,000 வரை வரவு… ஸ்டாலினின் அதிரடி ‘சம்மர் கிஃப்ட்’….!

By Nanthini on பங்குனி 4, 2026

Spread the love

தமிழக அரசின் மகத்தான மக்கள் நலத் திட்டங்களின் கீழ், கடந்த 20 நாட்களில் மட்டும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு சுமார் ரூ.8,200 முதல் ரூ.9,000 வரை நிதியுதவி நேரடியாகச் சென்றடைந்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பிப்ரவரி 13-ம் தேதியன்று மகளிர் உரிமைத் தொகையாக மூன்று மாதங்களுக்கான ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 குடும்பத் தலைவிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நேற்று முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்துடன் கோடைக்கால நிதியும் சேர்த்து ரூ.3,200-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது மாதாந்திர உதவித்தொகையுடன் இணைந்து ரூ.3,500-ம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்குச் சிறப்பு நிதியாக ரூ.4,000 வழங்கப்பட்டதன் மூலம், கோடைக் காலத்தின் சவால்களைச் சமாளிக்கவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எளிய மக்களுக்குத் தேவையான பொருளாதாரப் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்துள்ளது.