“இபிஎஸ் சர்வாதிகாரி.. ஆனா நான்”…. திமுகவில் இணைந்த அடுத்த நிமிடமே ஓபிஎஸ் அடித்த ‘சிக்ஸர்’…. ஆடிப்போன அதிமுகவினர்….!

By Nanthini on மாசி 27, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று முறைப்படி திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவை மீட்பேன் என்று கூறி வந்த அவர், எடப்பாடி பழனிசாமியின் ‘சர்வாதிகார’ போக்கு மற்றும் தென் மாவட்டப் புறக்கணிப்பு காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்ட ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியின் ஆணவத்தால் அதிமுக அழிவுப் பாதையில் செல்வதாகவும், ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுகவில் ஒரு சாதாரணத் தொண்டனாகப் பணியாற்றப் போவதாக அறிவித்துள்ள ஓபிஎஸ், கட்சித் தலைமை இடும் கட்டளைகளை ஏற்று செயல்படப் போவதாகவும், இது எவ்வித அழுத்தமும் இன்றி தான் எடுத்த சுயமான முடிவு என்றும் கூறியுள்ளார். மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், தனது அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள அதிமுகவின் பரம எதிரியான திமுகவில் இணைந்திருப்பது, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவின் எதிர்காலம் மற்றும் தென் மாவட்ட அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.