Director Thangar Bachchan

இவரை போன்றவர்களுக்கு எல்லாம் கடற்கரையில் நினைவிடம் எழுப்ப மாட்டார்கள் – இயக்குனர் தங்கர் பச்சான் வெளியிட்ட வேதனை பதிவு!

By Elango on மாசி 25, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் ஒளி ஓவியர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் தங்கர்பச்சான். அழகி பள்ளிக்கூடம் சொல்ல மறந்த கதை உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடலூரை சேர்ந்த தங்கர்பச்சான் கடந்த முறை பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் இயக்குனர் தங்கர் பச்சான் கூறியிருப்பதாவது, தோழர் நல்லக்கண்ணு ஐயா நேர்மையின் அடையாளமாகத் திகழ்கிறார். அவரை போட்டிப் போட்டுக் கொண்டு புகழ்ந்து இரங்கல் தெரிவிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அவரிடமிருந்து எதையெல்லாம் கற்றுக் கொண்டார்கள்? இவரைப் பார்த்து இனிமேலாவது எதை எதையெல்லாம் அடுத்தத் தலைமுறைக்கு கற்றுத்தரப் போகிறார்கள்? இவரைப் போன்றவர்களுக்கெல்லாம் கடற்கரையில் நினைவிடம் எழுப்ப மாட்டார்கள்! என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.