பெற்ற தாயே தன் ரத்தத்தை இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியுள்ளது. ஹைதராபாத் அருகே உள்ள திண்டிகல் பகுதியில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மம்தா என்ற பெண் கட்டுமானப் பணிக்காகக் குடிபெயர்ந்து தங்கியிருந்தார். இந்நிலையில், பசியால் இடைவிடாது அழுதுகொண்டிருந்த தனது இரண்டு மாத ஆண் குழந்தையை, ஆத்திரத்தில் எரியும் அடுப்பில் வைத்து அந்தப் பெண் எரித்துக் கொன்றுள்ளார். ஈரக்குலையை நடுங்க வைக்கும் இந்தச் செயல் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மம்தாவைக் கைது செய்தனர்.
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயே, தன் குழந்தையின் அழுகுரலுக்கு உணவளிக்காமல் அவனை நெருப்புக்கு இரையாக்கியது மனிதநேயமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது. பசியின் வலியால் அழுத பச்சிளம் பாலகனுக்கு மரணத்தை பரிசாக அளித்த அந்தத் தாயின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு தாயின் கைகளாலேயே ஒரு பிஞ்சு உயிர் கருகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
