தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்றைய தினம் (பிப்.23) பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் நேரில் சந்தித்துத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
குறிப்பாக, நேதாஜி ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் சி.பி. பிரபு, அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவையின் தலைவர் டாக்டர் இராஜன் மற்றும் அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவையின் தலைவர் சோ. ஜெயமணி ஆகியோர் அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்படவும், 2026 தேர்தலில் முழு ஆதரவை வழங்கவும் முன்வந்துள்ளனர். இது தேர்தல் களத்தில் அதிமுகவின் பலத்தை அதிகரிக்கும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
