உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம், பக்பரா பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு பெண், தனது தாந்த்ரீக காதலனுடன் இருந்த முறையற்ற உறவின் காரணமாக, தனது சொந்த மைனர் மகள்களையே அவனிடம் ஒப்படைத்துள்ளார். அந்த நபர் 13 மற்றும் 10 வயதுடைய அந்த இரு சிறுமிகளையும் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். தனது தாயே தங்களைக் காதலனிடம் சிக்க வைத்ததால், அந்தப் பிஞ்சுகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நீண்ட நாட்களாக மறைக்கப்பட்டிருந்த இந்த உண்மை, சிறுமிகளின் தாத்தா மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட பக்பரா போலீசார், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தனது மகள்களின் வாழ்க்கையைச் சீரழித்த தாய் மற்றும் அந்தத் தாந்த்ரீக காதலன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனிதாபிமானமற்ற இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
