BREAKING: மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2080 உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

By Soundarya on மாசி 21, 2026

Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 21, 2026) அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 2,080 அதிகரித்து, புதிய உச்சமாக ரூ. 1,17,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 260 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 14,680-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஏறுமுகத்தில் உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் போன்ற உலகளாவிய காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுவதால், சர்வதேச முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலையும் உயர்ந்து தற்போது லட்சங்களை கடந்து விற்பனையாகி வருகிறது.