ரூ.5000+ரூ.3000+ரூ.1000= ரூ.9000… இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. குஷியில் தமிழக மக்கள்..!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் திமுக அரசு கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் ₹9,000 ரொக்கப் பணத்தைப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட ₹3,000 ரொக்க உதவித்தொகை, ஜனவரி மாதத்திற்கான முன்கூட்டிய உரிமைத் தொகை ₹1,000, மற்றும் நேற்று (பிப். 13, 2026) ஒரே தவணையாகச் செலுத்தப்பட்ட ₹5,000 எனப் பெண்களின் கைகளில் பெரும் தொகை கிடைத்துள்ளது. நேற்றைய வரவில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை (3 x 1,000) மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ₹2,000 ஆகியவை அடங்கும்.

இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது இத்திட்டம் முடக்கப்படலாம் என்ற அச்சத்தில், அவசரம் அவசரமாகப் பணத்தை வாரி வழங்கி வாக்குகளை வாங்கத் திமுக முயல்வதாக அதிமுக மற்றும் பாமக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், “யார் தடுத்தாலும் பெண்களுக்கான இந்த உரிமைத் தொகை சென்று சேருவதை எவரும் தடுக்க முடியாது” என்றும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.