Breaking: அடுத்தடுத்து அதிர்ச்சி..! விஜய் கூட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..?

By Soundarya on மாசி 13, 2026

Spread the love

சேலத்தில் இன்று (பிப்ரவரி 13, 2026) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சோகம் நிகழ்ந்துள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் (37) என்ற நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். கூட்டத்தின் போது திடீரென மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், நிகழ்ச்சி நடைபெற்ற சீலநாயக்கன்பட்டி திடல் அருகே அடையாளம் தெரியாத மற்றொரு முதியவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான வெயிலில் காத்திருந்ததால் 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்கள் கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசலை மீண்டும் நினைவுபடுத்துவதாக அமைந்தது.