“ஸ்டாலின் கையாண்ட 3 ரகசிய யுக்திகள்”… ஒரு சொட்டு தகவல் கூட கசியாமல் நடந்தது எப்படி?…. மிரண்டுபோன அரசியல் கட்சிகள்…!

By Nanthini on மாசி 13, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெரும் அறிவிப்பை வெளியிட்டு அரசியல் களத்தில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். சுமார் 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் தலா 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்ட பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக 3,000 ரூபாயும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக கூடுதலாக 2,000 ரூபாயும் சேர்த்து இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளுக்குச் சிறிதும் தகவல் கசியாத வகையில், மிகவும் ரகசியமாகவும் நுணுக்கமாகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதை உணர்ந்த முதலமைச்சர், முன்கூட்டியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையமோ அல்லது சட்ட ரீதியாகவோ எவ்விதத் தடையும் ஏற்படாதவாறு தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

   

இந்த அறிவிப்போடு மற்றொரு முக்கிய வாக்குறுதியையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். வரும் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமைந்தவுடன், தற்போது வழங்கப்படும் மாதந்திர உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். தேர்தலைக் காரணம் காட்டி யாராலும் உரிமைத் தொகையை முடக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

   

கோடைக்காலத் தேவைகளையும், தேர்தல் கால தாமதங்களையும் கருத்தில் கொண்டு மிகத் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு காலதாமதமானால் கூட, இல்லத்தரசிகளின் அன்றாடப் பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் மே மற்றும் ஜூன் மாதங்களையும் கணக்கில் கொண்டு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் திமுகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.