போடு ரகிட ரகிட…. ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்….!

By Nanthini on மாசி 12, 2026

Spread the love

தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு (Double Fortified Salt) விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழக மக்கள் தொகையில் சுமார் 52 சதவீதம் பேர் போதிய இரும்புச்சத்து குறைபாட்டினால் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பொது சுகாதாரப் பிரச்சினையைக் கையாண்டு, ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது.

தற்போது ரேஷன் கடைகளில் சாதாரண உப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு மாற்றாக இந்தச் செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் எளிய மக்களுக்கும் தரம் மற்றும் சத்து நிறைந்த உப்பு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். இத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்த உப்பு பாக்கெட்டுகள் விற்பனைக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.