பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், காவல்துறை வேலைக்காகத் தயாராகி வந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, அவரது விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மணமேடையில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞர் சுயநினைவின்றி, உடல் தளர்ந்த நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அவருக்குப் போதைப்பொருள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அவர் அமர்ந்திருக்கக் கூட முடியாமல் முன்னோக்கிச் சாயும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
<
A case of ‘Pakdaua Marriage’ has came to light from Samastipur district in Bihar. Here, a young man preparing for the Bihar Police recruitment was allegedly abducted and forcibly married after being given a sedative substance
pic.twitter.com/O9pWBUBe6F— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 11, 2026
/div>
திருமணச் சடங்குகளின் போது அந்த இளைஞரால் தனது கைகளைக் கூட உயர்த்த முடியாத நிலையில், அங்கிருந்த மற்றவர்கள் அவரது கைகளைப் பலவந்தமாகப் பிடித்து மணமகளுக்கு மாலை சூட்ட வைத்துள்ளனர். “பகாடுவா ஷாதி” எனப்படும் இத்தகைய கடத்திக் கட்டாயத் திருமணங்கள் பீகாரின் சில பகுதிகளில் இன்றும் தொடர்வது பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வீடியோ ஆதாரங்கள் குற்றவாளிகளுக்கு எதிரான முக்கியச் சான்றாகப் பார்க்கப்படுகின்றன.
