சீனாவில் ஒரு சகோதரி தன் தம்பியின் எதிர்காலத்திற்காக செய்துள்ள தியாகம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. 18 வயதே ஆன யாங் என்ற பெண், தன் தம்பியை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு போராடி வருகிறார். குடும்பத்தின் வறுமை காரணமாக வீட்டுச் செலவையும், தம்பியின் கல்விச் செலவையும் சமாளிக்க முடியாமல் தவித்த அவர், ஒரு கடுமையான முடிவை எடுத்தார்.
வாடகைக்கு பணம் செலவழிப்பதைத் தவிர்க்க, யாங் தான் பணிபுரியும் அலுவலகத்தின் கழிப்பறையிலேயே வசிக்கத் தொடங்கினார். பகலில் வேலை பார்த்துவிட்டு, இரவில் அங்கேயே உறங்கும் அவர், விடியற்காலையில் மற்றவர்கள் வருவதற்கு முன்பே அந்த இடத்தை சுத்தப்படுத்திவிடுகிறார். இதற்காக அவர் மாதத்திற்கு வெறும் 50 யுவான் (சுமார் ₹590) மட்டுமே செலவிடுகிறார். தன் அடிப்படைத் தேவைகளைத் தியாகம் செய்து, அவர் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவரது தம்பியின் கல்விக்காகச் செல்கிறது. இந்தக் கதை போராட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு சகோதரியின் தன்னலமற்ற அன்பிற்குச் சான்றாகவும் அமைந்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இவரின் தியாகம், கடினமான சூழ்நிலையிலும் கல்விக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துகிறது
