சோம்பேறிதனத்தின் உச்சக்கட்டம்..! ரேபிடோவில் குப்பை டெலிவரி செய்த பெண்… மனிதாபிமானம் இல்லையா..? பெண்ணின் விசித்திர செயலால் அதிர்ந்த இணையதளம்..!!

By Soundarya on மாசி 6, 2026

Spread the love

குப்பை கொட்டுவதில் உச்சக்கட்ட சோம்பேறித்தனத்தைக் காட்டிய ஒரு பெண்ணின் செயல், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தனது வீட்டில் சேர்ந்த குப்பைகளை அகற்ற அந்தப் பெண் ‘ரேபிடோ’ (Rapido) சேவையைப் பயன்படுத்தியுள்ளார். வீட்டிற்கு வந்த ஓட்டுநரிடம் ஒரு பார்சலைக் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு டெலிவரி செய்யுமாறு கூறியுள்ளார். அந்த இடத்திற்குச் சென்ற ஓட்டுநர், அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அந்தப் பெண், “அது குப்பை, அங்குள்ள குப்பை கிடங்கில் வீசிவிடுங்கள்” என்று சாதாரணமாகக் கூறியுள்ளார். ஒரு மனிதனின் உழைப்பையும், டெலிவரி சேவையையும் இவ்வளவு கேவலமாகப் பயன்படுத்திய அந்தப் பெண்ணின் செயல் ஓட்டுநரை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் இணையத்தில் பரவியதும், “சம்பளம் கொடுக்கிறோம் என்பதற்காக எதையும் செய்யச் சொல்லலாமா?” என நெட்டிசன்கள் அந்தப் பெண்ணை வரிந்து கட்டி விமர்சித்து வருகின்றனர்.