விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 20-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ள சூழலில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அவரது சகோதரர் சி.வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் வெளிப்படையாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், சீட் வேண்டுவோர் ரூ. 15 கோடியை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கட்சி ஏற்கனவே முடிவு செய்துள்ள வேட்பாளரே நிறுத்தப்படுவார் என்றும் அவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் சீட் கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்த நிலையில், தற்போது அதிமுகவில் சீட் வாங்குவது கோடிக்கணக்கில் பேரம் பேசப்படும் வியாபாரமாக மாறிவிட்டதாக விருப்பமனு தாக்கல் செய்த நிர்வாகிகள் அதிருப்தியுடன் புலம்பி வருகின்றனர்.
