இயக்குனர் அட்லி இயக்கும் 6வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. நடிகர் அல்லு அர்ஜூன் 3 வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தில் தீபிகா படுகோனே உட்பட 5 நாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியானது. இதில் மிருணாள் தாகூரும் ஒருவர் என்று கூறப்பட்டது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை மிருணாள் தாகூரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், உண்மையாகவா? அந்த படத்தில் நான் நடிக்கிறேனா? அப்படி நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அது நடந்தால் எல்லோரும் கொண்டாடலாம் என்று கூறியிருக்கிறார். அவரது பதிலின் மூலம் அட்லி இயக்கத்தில் மிருணாள் தாகூர் நடிக்கவில்லை என்ற தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
