BREAKING: காலையிலேயே தமிழ் நடிகர் அதிரடி கைது…. அதிர்ச்சியில் திரையுலகம்…..!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

கல்வி கட்டண உயர்வை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்ற மாணவர் சங்கத் தலைவர்கள் கடத்தித் தாக்கப்பட்ட வழக்கில், பிரபல தெலுங்கு நடிகரும் கல்வி நிறுவன அதிபருமான மோகன் பாபு உள்ளிட்ட 13 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருப்பதியில் உள்ள மோகன் பாபுவின் ‘எம்.பி யுனிவர்சிட்டி’ (MB University) கல்வி கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து, அங்கிருந்து இரண்டு மாணவர்கள் பொதுநல மனு அளிக்கச் சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் உயர் அதிகாரியாக நடித்துப் புகழ்பெற்ற மோகன் பாபு, தற்போது நிஜ வாழ்க்கையில் வன்முறை மற்றும் கடத்தல் புகாரில் சிக்கி சிறை சென்றுள்ளது ஆந்திரா மற்றும் தமிழக சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.