காலையிலேயே குஷியான எடப்பாடி… அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி… அதிர்ச்சியில் அறிவாலயம்….!

By Nanthini on மாசி 4, 2026

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு சமுதாய அமைப்புகள் மற்றும் பேரவைகளின் ஆதரவைத் திரட்டுவதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. வாக்கு வங்கியை வலுப்படுத்தவும், குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை உறுதி செய்யவும் இத்தகைய சிறிய அமைப்புகளின் ஆதரவு தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், தற்போது அதிமுக தனது ஆதரவு வட்டாரத்தை விரிவுபடுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகம் தனது முழுமையான ஆதரவை அதிமுகவிற்குத் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில், இக்கழகத்தின் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர். இந்தச் சந்திப்பு அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, வரும் தேர்தலில் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பிற்குப் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.