காலையிலேயே பரபரப்பு… “தடுக்க நினைத்த இபிஎஸ்.. தட்டித் தூக்கிய திமுக”…. உதய சூரியனில் இணைந்த 250 உடன்பிறப்புகள்…. பரபரக்கும் அரசியல் களம்….!

By Nanthini on மாசி 1, 2026

Spread the love

ஓபிஎஸ் அணியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட 250 நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் அணியிலிருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த பின்னடைவுகளால் அந்த அணி பலவீனமடைந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறுபவர்கள் திமுக போன்ற மாற்றுக்கட்சிகளுக்குச் செல்வதைத் தடுக்க எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவிலேயே இணைத்து, கட்சியைப் பலப்படுத்த அவர் திட்டமிட்டு வரும் சூழலில், சேலத்தில் நடந்த இந்த இணைப்பு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவருக்குமே ஒரு சவாலான சூழலை உருவாக்கியுள்ளது. வரும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அதிமுக தலைமை தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.