BREAKING: பொங்கலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி…!!

By Soundarya on தை 14, 2026

Spread the love

2026 பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த முறை புதுமையாக, ஒவ்வொரு குடிமகனின் மின்னஞ்சலுக்கும்  அவரவர் பெயரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளது மக்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மனிதனுக்கும் இயற்கைக்குமான ஆழமான பிணைப்பைப் பறைசாற்றும் பொங்கல் பண்டிகை, இன்று ஒரு சர்வதேச விழாவாக உலகெங்கும் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகின் மிகப்பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் தான் பெரும் பெருமிதம் கொள்வதாகப் பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்துள்ளார். உழைப்பையும், இயற்கையையும் போற்றும் இந்தப் பொங்கல் திருநாள், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.