நடுரோட்டில் சுருண்டு விழுந்த முதல் பெண் ஆட்டோ டிரைவர்…! முன்னாள் கணவனின் வெறிச்செயல்… பின்னணியில் இருக்கும் பகீர் காதல் கதை…!

By Devi Ramu on தை 11, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நகரின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி, கடந்த 4-ம் தேதி இரவு பணி நிமித்தமாக ஆட்டோவை ஓட்டிச் சென்றபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சாலையோரம் அனிதாவின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அனிதாவின் முன்னாள் கணவர் முகேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தத் திட்டமிட்ட படுகொலையை அரங்கேற்றியது அம்பலமானது.

முகேஷும் அனிதாவும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்த நிலையில், இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் அனிதா அவரைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், அவர்களின் பழைய திருமண நாளிலேயே அனிதாவைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். தலைமறைவாக இருந்த முகேஷைப் பிடிக்க முயன்றபோது அவர் போலீசாரைத் தாக்க முயன்றதால், தற்காப்பிற்காக போலீசார் அவரது காலில் சுட்டு அதிரடியாகக் கைது செய்தனர்.