உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், காதல் திருமணம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கி ஊழியராகப் பணிபுரியும் ஒரு பெண்ணைச் சொந்தக் குடும்பத்தினரே பட்டப்பகலில் கடத்திச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுராவைச் சேர்ந்த ரவீந்தர் சிங் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்கள் இருவரும் வெவ்வேறு வங்கி கிளைகளில் பணியாற்றி வருகின்றனர்.
சம்பவத்தன்று, மதுராவில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் பூதேஷ்வர் கிளையில் பணியில் இருந்த பிரியங்காவை, அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுப் பகிரங்கமாகக் கடத்திச் சென்றுள்ளனர். இந்தத் திக் திக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. தனது மனைவியைக் குடும்பத்தினரே கடத்திச் சென்றது குறித்து ரவீந்தர் சிங் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
