ஹைதராபாத் மல்காஜ்கிரி அரசு கல்லூரியில் பயின்று வந்த 19 வயது மாணவி வர்ஷினி, கல்லூரிக்குத் தாமதமாக வந்த காரணத்திற்காக விரிவுரையாளர்களால் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் தாமதம் ஆனதாக அவர் கூறியபோது, அந்த விரிவுரையாளர் அதற்கு ஆதாரம் கேட்டு அவரை வகுப்புத் தோழிகள் முன்னிலையில் ‘நடிப்பதாக’ இழிவுபடுத்தித் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளான வர்ஷினி, வீட்டிற்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவு (Brain Clot) காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ள நிலையில், விரிவுரையாளரின் கொடுமையான நடத்தையே தனது மகளின் இறப்பிற்குத் தூண்டுதலாக இருந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
SHOW US PROOF OF MENSTRUATION!
19 year old Varshini, a student of Government College, Malkajgiri, Hyderabad was late to college.
Lecturers refused to let Varshini into the classroom. She told her lecturer that she is on her period and hence got delayed.
The great lecturer… pic.twitter.com/oHTvOwvjMB
— Revathi (@revathitweets) January 9, 2026
