தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இந்தத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ₹3,000 ரொக்கப்பணம் ஆகியவற்றுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் வழங்கப்படுகின்றன. தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் இந்த அரசு அறிவித்த பொங்கல் பரிசுகளைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலைகள் குறித்து அமைச்சர் ஆர். காந்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, பெண்களுக்கு 15 வகையான நவீன வடிவமைப்புகளில் (Designs) சேலைகளும், ஆண்களுக்கு 4 வெவ்வேறு நிற பார்டர்களுடன் கூடிய வேட்டிகளும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்தமான வண்ணம் மற்றும் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
