தமிழக வெற்றிக் கழகத்தில் திகாரப்பூர்வமாக இணைந்த பிறகு, முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் அ.தி.மு.க. குறித்தும், தனது கட்சி மாற்றம் குறித்தும் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மீண்டும் கட்சியில் இணையத் தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக உருக்கமாகத் தெரிவித்தார். பல முறை கடிதம் எழுதியும், தூது அனுப்பியும் தலைமை தன்னை கண்டுகொள்ளவில்லை என்றும், அ.தி.மு.க-வில் ஒரு சிலரின் ஆதிக்கம் காரணமாகத் தகுதியுள்ளவர்களுக்கு இடம் மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க-வில் இணைய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், நடிகர் விஜய்யின் கொள்கைகளும், அவரது தெளிவான அரசியல் பார்வையும் ஈர்த்ததால் த.வெ.க-வில் இணைய முடிவு செய்ததாகக் கூறினார். “விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தது புதிய உற்சாகத்தைத் தருகிறது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வெற்றிக்காகத் தான் முழுமையாக உழைக்கப் போவதாகவும், அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள மேலும் பல மூத்த நிர்வாகிகள் விரைவில் த.வெ.க-வில் இணைவார்கள் என்றும் அவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
