தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 48 மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 144 மாவட்ட செயலாளர்களில் ஒன்பது பேர் மண்டல பொறுப்பாளர்களாகவும் 48 பேர் நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை மாதத்துடன் 96 மாவட்ட செயலாளர் களின் பதவிக்காலம் நிறைவடைவதால் அதன் பிறகு நியமன முறையில் இல்லாமல் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
