விஜய் சொன்ன அந்த வார்த்தை… என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வழிந்தது… நடிகர் ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான பதிவு….!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஸ்ரீமன், தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன் நிகழ்ச்சியிலிருந்து இப்பதான் திரும்பி வந்தேன். விஜய் மேடையில் ‘இதுதான் என் கடைசிப் படம்’ என்று சொல்வதை நான் கேட்டது இதுவே முதல் முறை. அதைக் கேட்டதும் என்னை அறியாமலேயே சில நொடிகள் கண்ணீர் வழிந்தது, முகத்தைக் கழுவ உடனடியாகக் கழிவறைக்குச் சென்றேன். விஜயமா, உங்கள் கடின உழைப்பு அனைத்தும் உங்கள் கனவுகளை அடைய உங்களுக்கு உதவும், எங்கள் பிரார்த்தனைகள் என்றும் உங்களுடன் உள்ளன” எனப் பதிவிட்டுள்ளார்.

விஜய் தனது அரசியல் வருகையை முன்னிட்டு, ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்குப் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது ஸ்ரீமனின் இந்தப் பதிவு, விஜய் தனது திரையுலகப் பயணத்தை முடித்துக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.