நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 21 தவணை பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் தொகையை 12,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பி எம் கிசான் திட்டத்தில் 22 ஆவது தவணைத்தொகை 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். பிப்ரவரி மாதத்தில் பணம் டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. உங்களுக்கு பணம் கிடைக்குமா என்பதை அறிய பி எம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று Know your status என்ற ஆப்ஷனில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டால் உங்களுக்கு பணம் கிடைக்குமா? கிடைக்காதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
