BREAKING: புதிய ரேஷன் கார்டுகள்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on மார்கழி 30, 2025

Spread the love

தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ள பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகளும் ரேஷன் கார்டு உள்ள பயனாளிகளுக்கு தான் கிடைக்கின்றன. மேலும் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அரசின் திட்டமும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் செயல்படுத்தப்படுகிறது. இதனால் அனைத்து தேவைகளுக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக இருப்பதால் பலரும் தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

இதனிடையே புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டு மே முதல் தற்போது வரை விண்ணப்பித்தவர்களில் 98.23% பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து 20.56 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.