மக்களே..! பொங்கல் பரிசுத்தொகை.. காலையிலேயே வந்த இனிப்பான செய்தி…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அரசு வழங்கவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு, ஏலக்காய், முந்திரி மற்றும் உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு, ஜனவரி இரண்டாவது வாரத்திற்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, பொங்கல் ஊக்கத்தொகையாக ₹3,000 வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.