தங்கத்தை மட்டும் நம்பினா போதுமா…? நடுத்தர குடும்பங்களின் லாபத்தைக் குறைக்கும் 8 முதலீட்டுத் தவறுகள்…!!

By Devi Ramu on மார்கழி 27, 2025

Spread the love

காலம் மாறிவிட்டதால் பழைய காலத்து சேமிப்பு முறைகள் இப்போது லாபம் தருவதில்லை. வங்கியில் போடும் வைப்பு நிதி மற்றும் சேமிப்புக் கணக்குகள் பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் உங்கள் பணத்தின் மதிப்பைச் குறைக்கின்றன. தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்றாலும், அதையே முழு நம்பகமாக மாற்றாமல் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் (SIP) முதலீடு செய்வதே நீண்ட கால அடிப்படையில் பெரும் லாபத்தைத் தரும்.

காப்பீடு என்பது பாதுகாப்பிற்காக மட்டுமே, அது வருமானம் தரும் முதலீடு அல்ல என்பதைப் புரிந்துகொண்டு, எண்டோவ்மென்ட் பாலிசிகளைத் தவிர்த்து புத்திசாலித்தனமாகத் திட்டமிட வேண்டும். முக்கியச் செலவுகளுக்காகப் போதுமான திட்டமிடல் இல்லாமல் கடன் வாங்குவது ஆபத்தானது. அதேநேரம் வளர்ச்சி தரும் நல்ல கடன்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

   

சொந்த வீடு வாங்குவது கௌரவமாகப் பார்க்கப்பட்டாலும், அதிக ஈ.எம்.ஐ சுமை இருந்தால் வாடகை வீடே மேல். எல்லாவற்றிற்கும் மேலாக, ஓய்வுக்காலச் சேமிப்பைத் தள்ளிப்போடாமல் இளம் வயதிலேயே தொடங்கினால் மட்டுமே கூட்டு வட்டி மூலம் கோடிக்கணக்கான ரூபாயைச் சேமிக்க முடியும். வெறும் சேமிப்பை மட்டும் நம்பாமல், வருமானத்தைப் பெருக்கி சரியான இடங்களில் முதலீடு செய்வதே இன்றைய பொருளாதாரச் சூழலுக்குப் பாதுகாப்பானது.