தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே 2026 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
கவர்னர் ஒப்புதலுடன் காலை 9.30 மணிக்கு பேரவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஜனவரி மாதம் கூடும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மக்களை கவரும் வகையில் திமுக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
