ஆக்சன் படங்களாக வருகிறது… எனக்கு ஏற்ற கதைகள் இன்னும் அமையவில்லை – கொம்பு சீவி படத்தில் நடித்த சண்முகபாண்டியன் ஆதங்கம்!

By Elango on மார்கழி 21, 2025

Spread the love

சமீபத்தில் கொம்பு சீவி படம் குறித்து பேசிய நடிகர் சண்முக பாண்டியன் கூறியதாவது, எனக்கு பெரும்பாலும் ஆக்சன் கதை தான் கிடைக்கிறது. ரொமான்டிக் காமெடி கதைகளையும் கேட்கிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. ஆனால் நான் நடிக்கும் படத்தில் தவறாக எதுவும் காட்டக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். எனக்கு ஏற்ற கதைகள் இன்னும் சரியாக வரவில்லை என்கிறார்கள். அப்படி சொல்ல முடியாது. எல்லாவற்றிலும் டைம் ரொம்ப முக்கியம்.

மதுரை வீரன் சோசியல் மெசேஜ் சொன்ன படம். ஆனால் ரிலீஸ் ஆன டைம் சரியில்லை. படை தலைவன் விலங்குக்கும் மனிதனுக்குமான உணர்வுகளை சொன்ன படம். கதையாக சொல்லும்போது நல்லா சொல்றாங்க. படமாக வரும் போது அது சரியாக வரலே. இதற்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. நான் நன்றாக தான் நடிக்கிறேன் என்று சண்முகபாண்டியன் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.