தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தேர்தல் களம் விறுவிறுப்பாகவே உள்ளது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்த பிறகு அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாற்றுக் கட்சியினரை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் அவர் தீவிரம் காட்டி வருகின்றார். இப்படியான நிலையில் செங்கோட்டையனுக்கு எதிராக அவருடைய அண்ணன் மகன் கே கே செல்வத்தை வைத்து இபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார்.
கோபி தொகுதியில் செங்கோட்டையனை தோற்கடிக்க வேண்டும் என அவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோபியில் அதிமுக சார்பில் போட்டியிட கேகே செல்வம் விருப்பம் மனு அளித்துள்ளார். சொந்த அண்ணன் மகனே தனக்கு நிகராக நிற்பது செங்கோட்டையனுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
