ஜூன் 2024 இல் கேரளா மாநிலம் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில், மூன்று மாத கர்ப்பிணியான ஷைமோல் என்ஜே என்பவர், தனது கையில் ஒரு குழந்தையை வைத்திருக்கும் நிலையில், வட்ட ஆய்வாளர் (Circle Inspector) பிரதாப் சந்திரன் கேஜி அவரை அடிப்பதை காண முடிகிறது. காவல் காவலில் இருந்த தனது கணவர் பென்ஜோ பேபி குறித்து விசாரிக்க ஷைமோல் காவல் நிலையம் சென்றபோது இந்த வன்முறை நடந்துள்ளது.
<
Another shocking instance of #PoliceBrutality in Kerala. Pregnant woman, carrying her infant, was assaulted at Ernakulam North Police Station. CCTV footage emerged only after a year-long legal battle. Is this the much-touted promise of women’s safety?@pinarayivijayan pic.twitter.com/bjplsOKojS
— V D Satheesan (@vdsatheesan) December 18, 2025
/div>
சுமார் 33 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ, காவல் நிலையத்திற்குள் நிலவிய பதற்றமான சூழலை வெளிப்படுத்துவதுடன், கேரள காவல்துறையின் அநாகரீகமான செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஆய்வாளர் பிரதாப் சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
