இந்திய சினிமாவில் இசைத்துறையில் மிகவும் பிரபலமானவர் பாடகர் கே ஜே ஜேசுதாஸ் மற்றும் பாடகி எஸ் ஜானி. பல்வேறு மொழிகளில் பாடகர் கே ஜே ஜேசுதாஸூம் பாடகி எஸ் ஜானகியும் இணைந்து பாடியிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாடகர் கே ஜே ஜேசுதாஸ் கூறியதாவது, நான் கடந்த 1961ம் ஆண்டிலிருந்து பல மொழிகளில் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறேன். நான் இதுவரை 60 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறேன், 70 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறேன் என்று மற்றவர்கள் சொல்வார்கள்.
ஆனால் நான் எத்தனை பாட்டு பாடி இருக்கிறேன் என்று நான் கணக்கெடுத்தது கிடையாது ஆனால் ஜானகி அம்மா எந்த பாட்டு பாடினாலும், அது எந்த படம் என்ன பாட்டு எப்போ பாடினோம் என்கிற எல்லாத்தையும் ஒரு சின்ன டைரியில் எழுதி வெச்சிருப்பாங்க. அதை பார்த்து எனக்கு அவங்க மேல ரொம்ப பொறாமையா இருக்கும். நானும் அது மாதிரி டைரியில் எழுத ஆரம்பித்தேன். ஆனால் அந்த 2 டைரியும் காணாமல் போயிடுச்சு என்று பாடகர் கேஜே ஜேசுதாஸ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
