ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் திட்டத்தை செயல்படுத்த முடியாது…. தமிழக அரசு விளக்கம்…!!

By Soundarya on மார்கழி 16, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஏனெனில் ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்குவதற்கு சுமார் ரூ.4000 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், அத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று அரசு கூறியுள்ளது.

ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இது குறித்த இன்றைய (டிசம்பர் 16) விசாரணையின்போது, தமிழக அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.