தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். தனது கூட்டணி கட்சிகளை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் 2026 தேர்தலில் 40 சீட்டை இளைஞர் அணிக்கு ஒதுக்க உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல மாநாட்டிற்கு பிறகு இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளாராம். குறைந்தபட்சம் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் (38) நிச்சயம் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சுமார் 5 லட்சம் நிர்வாகிகளுடன் திமுக இளைஞரணி இருப்பது கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
