குஷியோ குஷி… இனி 100 நாள் வேலை இல்லை, 125 நாள் வேலை வரப்போகுது… மத்திய அரசு அதிரடி…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

நாட்டில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ஆம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை வழங்கப்படும் என்ற உத்திரவாதத்தை இந்த திட்டம் அளிக்கின்றது. இந்தத் திட்டத்தின் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர். இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு 90% நிதியை மத்திய அரசு வழங்கி வரும் நிலையில் 60 சதவிதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நிதி பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்வதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று தெரிகிறது. 100 நாள் வேலைக்கான பணிகளை தேர்வு செய்வதற்கான வரைமுறையை மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் மத்திய அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டே மாநில அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபதனைகள் விதிக்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் விவசாய அறுவடை காலத்தில் 60 நாட்களுக்கு ஊரக வேலை திட்டத்தில் பணிகளை குறைக்க கூடாது என்றும் ஊரக வேலை திட்ட பணி நாட்களாக 125 நாட்களாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.