தமிழகத்தில் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதாவது வருகின்ற திங்கட்கிழமைக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யுமாறு அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டிசம்பர் 20ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 2026 ஜனவரி பத்தாம் தேதி தேர்வு நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
