தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சியினர் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்தவகையில் அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்தை வைத்து பாரதிய ஜனதா கட்சியினர் செய்த அரசியல் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருப்பதால், பாஜகவினருக்கு திடீரென முருகன் மீது பாசம் வந்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தின் மூலம் திமுக வலுப்பெறுகிறது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 15% வாக்குகள் அவர்களுக்கு உறுதியாகின்றன” என்று தெரிவித்தார்.
