தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே சமீபத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்ததால் தற்போது விஜய் டிவி மேலும் பலம் கூடியுள்ளது. இதனால் திமுகவுக்கு போட்டியாக விஜய் தான் தற்போது களத்தில் உள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாக குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், நாளுக்கு நாள் நமக்கு ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது. லேட்டஸ்டாக நாம் எடுத்த சர்வே படி நமக்கு 31% ஆதரவு இருக்கிறது. திமுகவுக்கே 29 சதவீதம் தான் வருகிறது. அதிமுக மூன்றாம் இடத்துக்கு செல்கிறது. 160 தொகுதிகளில் நமக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
